Friday 21 October 2011

வசிக்கிறேன்...வாழ்கிறேன்!

பிரேம லதா



பேசாத காதலும், வீசாத தென்றலும்

வீண்தானே.......



இதை சொல்லி, இதை எடுத்துக்காட்டி


இதை நினைவுபடுத்தி, இதை தெளிவுபடுத்தி

...
எழுதத் தோன்றும் எழுதாதவரை!

பேசத் தூண்டும் பேசாதவரை!



இந்த ஒவ்வொரு எழுத்துக்களிலும் - நீ

உயிராய் உணர்வாய் வசிக்கிறாய் - உன்

இதழ்கள் வாசிப்பதற்காகவே - நான்

வசிக்கிறேன்...வாழ்கிறேன்!



எந்தப் புள்ளியில் என்னை

முழுவதுமாய் தொலைத்தேன்

என்னை உடைத்தேன்

என்பதெல்லாம் மறந்து போய்



என்றோ பெய்த மழையில்

முளைக்கின்ற விதையைப் போல்

எனக்குள் எங்கோ இருந்து

காதலாய் முகிழ்த்தவன் நீதானே...

No comments:

Post a Comment

 
;