Wednesday 12 October 2011

எனக்குள் நீ








நடுநிசியில்




உறக்கமின்றித் தவிக்கும்



நான்.....



நெருப்பினில்



ஒளிந்திருக்கும் ஒளியாய்



...
எனக்குள் நீ.....



நொறுங்கிச் சிதறிய



கண்ணாடித் துண்டுகளாய்



உன் பிம்பங்கள் - என்



பார்வையெங்கும்...



மொழி பெயர்க்கப்படாத



வார்த்தைகள்



உனக்காய் காத்துக்கிடக்க



அர்த்தமற்ற மௌனங்கள்



ஆயிரம் உன்னிடமிருந்தும்



அமைதியாய் நான்....



எதிர்பார்ப்பின்றி கிடந்தாலும்



உன்



ஆத்மார்த்த அன்பை



எதிர்பார்த்து ஏங்கி



அச்சப்படவே செய்கிறேன்



நீ



உதிர்க்கும் வார்த்தைகளுக்காக!



காற்றைப் போல் எனைச்



சுற்றினாய்...



காற்றைப் போல்



கண்முன் காணாமலேயே



சுற்றுகின்றாய்...



கடவுளைப் போல் எனை



ஆதரித்தாய்



கடவுளைப் போல்



மௌனித்துச் சிரித்தே



மறைகின்றாய்...



உறவைப் போல்



உறவாடி



உயிர் காத்தாய்...



உறவைப் போல்



பகையாடி



பழி தீர்க்கின்றாய்...



இன்னும் என்னதான் செய்யக்



காத்திருக்கின்றாய்...??



எத்தனை துயர் உன்னால்



வந்தாலும்



கலங்காமல் காத்திருப்பேன்



உன் காதலுக்காக!



காரணம்



கலக்கத்தை தவிர்ப்பதை



கற்றுக்கொடுத்தவனும்



நீதானே....






No comments:

Post a Comment

 
;