Friday 21 October 2011 0 comments

உன் இதழ்களில்




என்னவளே உன் இதழ்கள் பத்திரம்




உன் குரலின் இனிமையை




எங்கிருந்தோ ஒட்டு கேட்ட




வண்டுக்கள்




என்னை நச்சரிக்கிறது




...
உன் முகவரியை கேட்டு



அவைகளும்



உன் இதழ்களில்



இனிமையை சுவைக்க வேண்டுமாம்…



0 comments

கந்தகக் கனவுகள்


பிரேம லதா

கந்தகக் கனவுகள்

= = = = = = = = = =

விதிப்புயலால்

வேரோடு சாய்க்கப்பட்ட

வாழைக் க...
ன்றுகள்

நாங்கள்!


கனவினில் கூட

கல்வியைக் காணமுடியவில்லை

கந்தக மணத்தில் எங்கள்

கனவுகள் களவாடப்படுகின்றன!

வான்நோக்கி

கையுயர்த்தித் தொழுகின்ற

வாய்ப்பும் வரவில்லை!

வெடித்துச் சிதறுகிற

நெருப்புத்துளிகள் யாவும்

எங்கள்

சிவகாசிச் சிறுவர்களின்

வியர்வைத்துளிகளாய்....

பிஞ்சுவிரல்கள் யாவும்

நஞ்சுகள் குடிகொள்ள

விழிகளில் வழியும்

ஈரத்தால் நஞ்சுகள்

நமுத்தே போகின்றன!

வாழ்வை இழந்து

வசதி பொறுக்குகின்ற

இளம் சருகுகளாய்

சாய்கின்றோம்.....

எரிந்து கிடக்கும்

காகிதக் குப்பைகளில்

கிழிந்து கிடக்கும்

எங்கள் முகங்கள்!

எரிந்து கருகும்

மத்தாப்புகளின் வெளிச்சத்தில்

எரிந்து கொண்டிருக்கிறது

எங்கள்வீட்டு அடுப்புகள்!

அவதாரம் எடுத்தால்தான்

ஆண்டவன் கையில்

சங்குச்சக்கரம் - ஆனால்

சங்குச்சக்கரத்தை

சுற்றுவதற்கே நாங்கள்

அவதாரம் எடுத்திருக்கின்றோம்....!!

மற்றவர்கள்

மத்தாப்பு எரித்து

தீபாவளியை தீர்(ய்)க்கின்றனர்...!!

நாங்களோ

மத்தாப்பை திரித்து

எங்களை தீய்(ர்)க்கின்றோம்...!!

கந்தகத்தின் மூலம்

கண்ணியமாய்

காலனுக்குத் தூதனுப்பி

கவுரவமாய் கண்மூடியவர்கள்

நாங்கள்..!!

ஆண்டுக்கு ஒருமுறை

வீதிகளில் விசப்புகையும்

வெளிச்சமும், சத்தமும்.....

என்றால்

ஆண்டாண்டும் எங்களின்

விழிகளில் விசப்புகை

வாழ்விலோ இருள்

இதயத்திலோ இரைச்சல்!

இங்கு

எங்களுக்கான

விதி கண்மூடிதவமிருக்கிறது!

விழித்தால் விடியல்....
!!


0 comments

வசிக்கிறேன்...வாழ்கிறேன்!

பிரேம லதா



பேசாத காதலும், வீசாத தென்றலும்

வீண்தானே.......



இதை சொல்லி, இதை எடுத்துக்காட்டி


இதை நினைவுபடுத்தி, இதை தெளிவுபடுத்தி

...
எழுதத் தோன்றும் எழுதாதவரை!

பேசத் தூண்டும் பேசாதவரை!



இந்த ஒவ்வொரு எழுத்துக்களிலும் - நீ

உயிராய் உணர்வாய் வசிக்கிறாய் - உன்

இதழ்கள் வாசிப்பதற்காகவே - நான்

வசிக்கிறேன்...வாழ்கிறேன்!



எந்தப் புள்ளியில் என்னை

முழுவதுமாய் தொலைத்தேன்

என்னை உடைத்தேன்

என்பதெல்லாம் மறந்து போய்



என்றோ பெய்த மழையில்

முளைக்கின்ற விதையைப் போல்

எனக்குள் எங்கோ இருந்து

காதலாய் முகிழ்த்தவன் நீதானே...
 
;