Monday 17 October 2011 0 comments

என்னவளே


ஆனந்த் கெ,ம



என்னவளே என்னிடம்



ஒரு கவிதை சொல்ல சொன்னாள்



நானோ எதைப்பற்றி கூற என்றேன்



அவளை பற்றியே கூறு என்றாள்



நானோ கவிதையை கூறமுடியாது



எழுதுகிறேன் என்றேன் சரி என்றாள்


என் பேனா கவிபாட ஆரம்பித்தது இப்படி


பேசும் கவிதை உனது விழிகள்


சிக்கலான கவிதை உனது கூந்தல்


அபாய கவிதை உனது புருவம்


மௌனமான கவிதை உனது புன்னகை


ஆச்சரிய கவிதை உனது சிரிப்பு


அசைந்தாடும் கவிதை உனது காதணி


கூர்மையான கவிதை உனது மூக்கு


அடுக்கி வைத்த கவிதை உனது பற்கள்


நட்சத்திர கவிதை உனது முகபரு


நிலம் தீண்டும் கவிதை உனது பாதம்


இசைபாடும் கவிதை உனது கொழசு


எழுதி முடிப்பதற்கு முன்பே


பரித்துக்கொண்டாள்


இன்னும் முடிக்கவில்லை என்றேன்


அதை காதில் வாங்காமலே


படித்து முடித்த பிறகு


சிரித்துக்கொண்டே கூறினாள்


கடைசிவரியை அவள் கூற


எனை எழுத சொல்லி


உன் காதல்


ஒரு ஆச்சரியமான கவிதை என்று


அப்போது தான் அறிந்து கொண்டேன்


ஒரு கவிதைக்ககு கூட


கவிதை எழுத தெரியும் என்று…



0 comments

மாறாத உண்மை



பிரேம லதா




என் காதலின் கவிகளை



அப்புறப்படுத்திய உன்னிடம்



கனவுகள் பலிக்க யாசித்தேன்



யாசித்த என்னை



ஒருமுறையேனும் - உன்



யோசிப்பிற்குள்


கொண்டு வருவதேயில்லை....





கணநேரம் கடந்த போதும்


தீராத எனது அழைப்பை - நீ


தீண்டாமலேயே தீர்க்கின்றாய்...


சேவகம் செய்யாத - எனது


அழைபேசியை நோக்கியே


என் பார்வையும் அலைகிறது...


எனது வசந்த வார்த்தைகளை


வம்பாய் மறுக்கின்றாய்!





அன்பை நடவு செய்து


அறுவடை செய்யவே - நான்


நீர்ப்பாசனம் விடுகின்றேன்


என் கண்ணீரைக் கொண்டு!


நீயோ விதைப்பதற்கு முன்பே


அரும்பைக் கிள்ள


ஆயத்தமாகின்றாய்...





பல கவி படைத்தவனிற்கு


பாவியிவளின்


பாசம் புரியவில்லை


என்


காகிதக் கிறுக்கல்களை


கவியாய்க் காண்கின்றன


ஆயிரம் கண்கள்!


அக்கண்களுக்கு தெரியாது


உன்


பார்வைக்காய் தவமிருந்து


கசங்கிக் கிடந்தாலும்


காதலைச் சுமந்தபடி


நிற்கும் காகிதமல்ல அது


காவியம் என்று....


எது எப்படியோ - நீ


என்


நேசத்திற்குரியவன்


என்ற நிலைமாறி - நீ


என்


சுவாசத்திற்குரியவனாகிவிட்டாய்


என்பது மட்டும் முற்றிலும்


மாறாத உண்மை.....



0 comments

உன் காதலும் அப்படித்தானோ...



பிரேம லதா



விட்டு விட்டுத் தொடர்வதில்....

விட்டு விட்டுத்

தொடர்வதில்

நீயும் என் தந்தையும்

ஒன்றுடா...

என் காதலை

எப்படி விட்டு விட்டு

ஏற்கிறாயோ




அப்படியே

சிறுமியாய் இருக்கும்

காலச் சூழ்நிலையில்

தந்தையின் கைவிரல்பிடித்து

நடக்கையில்

எதிர்திசையில் வரும்

வணக்கங்களுக்கு

பதில் வணக்கம் சொல்வதிலேயே

என் தந்தையின் கைவிரல்கள்

எனக்கு கிடைக்காமலேயே

போய்விடும்....

உன் காதலும் அப்படித்தானோ...





0 comments

என் மனக்கண்ணில்



ஓலைக்குடிசை



கயிற்றுக்கட்டில்



களிச்சேறு



ஏர் கலப்பை



எருமை மாடு



பானைத்தண்ணீர்



விறகு அடுப்பு



அம்மிக்கல்



உரல்



உழக்கை



இவைப்போல் இன்னும் பல



எண்ணி பார்க்கையிலே



என் மனக்கண்ணில்



வந்து மறையும் பிம்பங்கள்



இருந்தாலும் என்னுள்



ஏதோவோரு பயம்



என் மனக்கண்ணில்



வந்து போகும் பிம்பங்கள்



என் மகன் கண்ணில்



வந்து போகுமா என்று…





 
;