Monday 10 October 2011 0 comments

வன்புணர்வு














வேலுச் சாமி


ஆரறிவென்று
அரட்டும்
ஆண்மிருகத்தின்
அகோர வெளிப்பாடு ...

உயிர்போகாமல்
உடலோடு
உள்ளம் சிதைத்த
உயிர்க் கொலை...

சிற்றின்பச்
சொறிநாய்களின்
சிறுவேட்கை தணிக்க
சிதைத்த பேரழிவு...

கத்திமுனைகள்
கணக்கற்றதில்
குத்திக்கிழித்த
கோடூர நிகழ்வு...

மலர்ரும்பை
மலைகொண்டு
மடிய வைத்தத
மரணக்கோலம்...

இத்தனையும் செய்துவிட்டு
உத்தமனாக உலாவரும்
உயிர் திண்ணும்
உயிரில்லா மனிதமிருகமே...

ஆரறிவில் உயர்வென்கிறாய்
அனைத்திலும் மேலென்கிறாய்
அகிலத்தின் அனைத்தையும்
ஆளும் பிறப்பென்கிறாய்...

பிந்தியஅறிவு
எந்த மிருகம்
செய்கிறது
வன்புணர்வு....

ஈன்றவரும் - நீ
ஈன்றவரும் காரிஉமிழ்வர்
சிந்திக்க மறுத்தால்
நிந்திக்கும் வேளையுண்டு மறவாதே...!!!
0 comments

கருப்பு நிலவு.




தேய்பிறை என்று
தேம்பி அழுகின்ற
கருப்பு நிலவு...

இரு பக்கம் காட்டும்
நாணயம் போல
தேய்பிறையில் உண்மை...

ஆளுக்காள் புகழ்வார்கள்
அதனாயுள் அற்பமே
தேய்பிறையின் போது...

தேய்பிறையாயினும் தோன்றும்
கண்ணில் தெரிந்தாலும்
கண்டுக்கொள்ளப்படாது நிலவு...

யதார்த்தம் உறைக்கும்
பெளர்ணமி நிரந்தரமல்ல
தேய்பிறையில் புரியும்...

நிலாச்சோறு மறந்து
குமிழ் விளக்கு
வெளிச்சத்தில் மெய்மறந்து...

ஆளாளுக்கு அவரவர்
விருப்ப விளக்குகளை
நிலவுக்கு மாற்றாக்கி..

பூமிக்கும் நிலவுக்குமான
உறவில் விரிசல்
தேய்பிறையின் போது...

விரிசல் அல்லவது
உண்மை காட்டும்
உலக கண்ணாடியது...

தேய்கிறது நிலவு
தேயட்டும் அது
தேய்வது இயற்கை...

தேய்பிறையில் தேடிவரும்
விலை மதிப்பில்லா
வாழ்க்கை பாடங்கள்...
0 comments

கண்ணுக்குள் கரைந்துவிடு













கவிஞர் கவிதாசன்


தேங்கி அழுதிடும் தேயாத வானம்
பொழி ஓயாத ஆடை மழையை
அதை தாங்கி தன் உளம் தேங்கி தேங்கிஅழுது
மனக் கண்ணீர் வடிக்கும்
மண்ணின் பெருமை காக்கும் பூமியைப் போல்
பெண்ணே என் உள்ளம் ஏங்கி ஏங்கி ஊமையாகி
தாங்கமுடியாமல் என் உயிரே போகுமுன்னே
அல்லும் பகலும் என் அன்பைச் சுமந்து
நீ மலர்ந்திடவே
என் உயிரில் கல்ர்ந்து என் ஊணோடு கலர்ந்துவிடு
என் அன்போடு நிறைந்து கண்ணுக்குள்
கரைந்துவிடு
 
;