*அன்புடன் - சுபாஷ் ஜீவன்*
ஓவியப் போட்டியா????
உன் திருவுருவ படத்தை
ஒரு தடவை அனுப்பு....!!!!
கோலப்போட்டியா ???
கொஞ்ச நேரம் நீ போய்
ஒய்யாரமாக இருந்து விடு ...!!!!
எழுத்துப் போட்டியா ???
உன் கையெழுத்தை
கடதாசியில் அனுப்பு....!!!!
கவிதைப்போட்டியா ??
நம் காதலை
கமுக்கமாய் அனுப்பி விடு ....!!!!
காதலின் எந்த ஒரு
போட்டிக்கும்
போட்டியில்லா விடை – நீ....!!!!
உன்னை போற்றி எழுத
வார்த்தை இன்றி
புலம்பித்திரியும்
பொடிப்பயல் - நான்....!!!!
;
No comments:
Post a Comment