Tuesday 11 October 2011

தலைநகரம் போனதால்....





நேற்ரு நீ தலை நகரம் போனதால் ?.....











சாலை ஓரம் இருக்கும்



சமிக்சை விளக்கு கூட



...
சரியாக எரியவில்லை.



நேற்ரைக்கு நீ தலைநகரம் போனதால்







இன்று மலர வேண்டிய



உன் வீட்டு மலர்கள் கூட



மொட்டுக்களாக மௌனம் சாதிக்கிறது.



நேற்ரைக்கு நீ தலைநகரம் போனதால்







நிலவு இல்லை ஊரில் என்று



கிராம வாசிகள் புலம்பல்..



நேற்ரைக்கு நீ தலைநகரம் போனதால்







என் ஊர் தென்றல் காற்று



திசைமாறி போனதாக



இன்றைய செய்தியில் படித்தேன்.



நேற்ரைக்கு நீ தலைநகரம் போனதால்







கிராமம் அழுக்காக மாறியது



நகரம் அழகாக மாறியது.



நேற்ரைக்கு நீ தலைநகரம் போனதால்







தலைவலியும்



தடிமலும் - என்



தாரகைக்கு வந்தது



தலைநகரம் போனதால்....











No comments:

Post a Comment

 
;