வசந்தமற்ற வாழ்க்கையில்
வசந்தமாய் வந்தவனே!
உன் நேசத்தினால், செத்தவள்
மீண்டும் உயிர்த்தெழுகின்றேன்....
... சுற்றங்கள் எனை சூழ்ந்திருந்தாலும் - அவை
மற்றவையாகத் தான் தெரிகின்றன!
சுற்றமே நீதான் என நெஞ்சமும்
சுகப்பட்டு சொல்கின்றது...
அடியார்க்குப் பணியாத
எனது உள்ளமும் - உன்
பார்வைக்குப் பணிந்து
கிடப்பது எப்படி?
வாழ்ந்தேனே கனவின்றி முந்நாள்....
வந்தாயே கனவாக இந்நாள்....
குளிர்ந்தேனே இரவோடு சுகமாய்....
இணைந்தேனே உறவோடு உயிராய்....
எந்நாளும் மாறாது
என் எண்ணம் - யார்
சொன்னாலும் போகாது
உன் வண்ணம்...
யாரோடு நீ கொஞ்சிப்
போனாலும்
பாரோடு உன் வழியில்
பயணிப்பேன்...
நிஜம் வேண்டாமென்று
நீ தள்ளிச் சென்றாலும்
நிழலாய் உன் பெயர் சொல்லி
உன்னவள் நானே - என்று
உரக்கக் கூவுவேன்...
ஒப்பில்லா மன்னவனே!
உப்பில்லா உணவும்
உன் கரம் பட்டால் சுவையாகும்!
பண்புள்ள இந்த பாவையும்
உன் பக்கத்தில் வந்தால்
பாக்கியமாகும்!
வசந்தமற்ற வாழ்க்கையில்
வசந்தமாய் வந்தவனே!
உன் நேசத்தினால், செத்தவள்
மீண்டும் உயிர்த்தெழுகின்றேன்....
... சுற்றங்கள் எனை சூழ்ந்திருந்தாலும் - அவை
மற்றவையாகத் தான் தெரிகின்றன!
சுற்றமே நீதான் என நெஞ்சமும்
சுகப்பட்டு சொல்கின்றது...
அடியார்க்குப் பணியாத
எனது உள்ளமும் - உன்
பார்வைக்குப் பணிந்து
கிடப்பது எப்படி?
வாழ்ந்தேனே கனவின்றி முந்நாள்....
வந்தாயே கனவாக இந்நாள்....
குளிர்ந்தேனே இரவோடு சுகமாய்....
இணைந்தேனே உறவோடு உயிராய்....
எந்நாளும் மாறாது
என் எண்ணம் - யார்
சொன்னாலும் போகாது
உன் வண்ணம்...
யாரோடு நீ கொஞ்சிப்
போனாலும்
பாரோடு உன் வழியில்
பயணிப்பேன்...
நிஜம் வேண்டாமென்று
நீ தள்ளிச் சென்றாலும்
நிழலாய் உன் பெயர் சொல்லி
உன்னவள் நானே - என்று
உரக்கக் கூவுவேன்...
ஒப்பில்லா மன்னவனே!
உப்பில்லா உணவும்
உன் கரம் பட்டால் சுவையாகும்!
பண்புள்ள இந்த பாவையும்
உன் பக்கத்தில் வந்தால்
பாக்கியமாகும்!
No comments:
Post a Comment