Friday 7 October 2011

மீண்டும் உயிர்த்தெழுகின்றேன்....



வசந்தமற்ற வாழ்க்கையில்

வசந்தமாய் வந்தவனே!

உன் நேசத்தினால், செத்தவள்

மீண்டும் உயிர்த்தெழுகின்றேன்....



...
சுற்றங்கள் எனை சூழ்ந்திருந்தாலும் - அவை

மற்றவையாகத் தான் தெரிகின்றன!

சுற்றமே நீதான் என நெஞ்சமும்

சுகப்பட்டு சொல்கின்றது...




அடியார்க்குப் பணியாத

எனது உள்ளமும் - உன்

பார்வைக்குப் பணிந்து

கிடப்பது எப்படி?



வாழ்ந்தேனே கனவின்றி முந்நாள்....

வந்தாயே கனவாக இந்நாள்....

குளிர்ந்தேனே இரவோடு சுகமாய்....

இணைந்தேனே உறவோடு உயிராய்....



எந்நாளும் மாறாது

என் எண்ணம் - யார்

சொன்னாலும் போகாது

உன் வண்ணம்...



யாரோடு நீ கொஞ்சிப்

போனாலும்

பாரோடு உன் வழியில்

பயணிப்பேன்...



நிஜம் வேண்டாமென்று

நீ தள்ளிச் சென்றாலும்

நிழலாய் உன் பெயர் சொல்லி

உன்னவள் நானே - என்று

உரக்கக் கூவுவேன்...



ஒப்பில்லா மன்னவனே!

உப்பில்லா உணவும்

உன் கரம் பட்டால் சுவையாகும்!

பண்புள்ள இந்த பாவையும்

உன் பக்கத்தில் வந்தால்

பாக்கியமாகும்!




No comments:

Post a Comment

 
;