Friday 7 October 2011

கண்கள் கொண்டு கட்டுகிறாய்....!!!!










**அன்புடன் - சுபாஷ் ஜீவன்**


உன் விழி வீச்சின்

வேகத்தாலே....!!!!

என் தாய் மொழியில்

பேசுவதுக்கும் தடுமாறுகிறேன் அன்பே....!!!!

கயிறு கொண்டு

கட்டாமல் - எனை

கண்கள் கொண்டு

கட்டுகிறாய்....!!!!



சின்ன சின்னதாய்

மீட்டெடுத்து எனை....!!!!

மொத்தமாக தொலைக்க வைக்கிறாய்....!!!!



சில்மிஷம்....!!!!

ஏதும் செய்யாமல் எனை

சிணுங்கி சிணுங்கி

சிதறடிக்கிறாய்....!!!!

தேன் பாற் தெள்ளமுதின்

இனிமையெல்லாம்...!!!

உன் தெற்றுப்பல்

சிரிப்பினில் சுவைக்க வைக்கிறாய்....!!!!

நானோ தினம் தினம்

உனை நினைத்து....!!!!

ஏங்கித்தான் போகிறேன்

என்னுயிரே....!!!!

No comments:

Post a Comment

 
;