Friday 7 October 2011

மாய விழிகள்





உன் மாய விழிகளின் மந்திரத்தால்
கட்டுண்டு


கிடக்கும் சாமான்யன் நான்
... உன் மயக்கும்


சிரிப்பில்


பூக்களும் தலைகவிழ்கின்றன


தோல்வியை ஒத்துக்கொண்டு


என் இதயமும் சங்கமம்


ஆனது உன்னிடம்



உன் சிருங்கார நடையில்


அம்மனைப் போட்டிக்கு அழைக்கிறாய்


வெற்றிபெறுவது என்னவோ


நீயாகத்தான் இருப்பாய்



உன்னை வர்ணிக்க


வார்த்தைகள் இல்லையடி -என்


நினைவுப் பெட்டகத்தினுள்


உதவிக்கு கம்பனை அழைக்கிறேன்




உன் கொடி இடையில்


என்னை கிறங்கவைத்து மயங்கவைத்து


கடமைகளை மறக்க செய்தாய்




ஒரு சராசரி ஆணடி நான்


இன்னும் எத்தனை எத்தனை


மாயாஜாலங்கள் உனக்குள்ளே




மூழ்கி முக்குளிக்க


நான் என்றைக்கோ தயார் -நீ ???

No comments:

Post a Comment

 
;