Wednesday 5 October 2011

கானல் நீரில் .........











காகிதத்தில்

கப்பல் செய்து

கானல் நீரில்
...
பயணம் செய்வோம் வா என்று

நீ அழைக்கும் போதெல்லாம்

பொய் என்று தெரிந்தும்

வரத்துடிக்கிறது மனது

உன் பொய்களையே நான்

இப்படி நேசித்தால்

உன்மீது கொண்ட காதலை

நான் எப்படி சொல்லுவது ???

போகும் போது

என்னை கொண்டு செல்

இல்லை

கொன்று செல்

நீ இன்றி ஒரு வாழ்வு

நிச்சயமாய் எனக்கு வேண்டாம் ..

- சுபாஷ் ஜீவன் -

No comments:

Post a Comment

 
;