வரங்களே சாபங்கள் என்றால்
இங்கு வரங்கள் எதற்கு?
தோல்விகளே தொடர்கள் என்றால்
இங்கு வெற்றிகள் எதற்கு?
உதிர்வதற்கு பூக்கள் என்றால்
... இங்கு வசந்தம் எதற்கு?
முற்றுபுள்ளிகள் முடிவு என்றால்
இங்கு தொடர்கதைகள் எதற்கு?
சோகங்களே தொடர்ச்சி என்றால்
இங்கு மகிழ்ச்சி எதற்கு?
ஓவியங்கள் மட்டுமே அழகு என்றால்
இங்கு காட்சிகள் எதற்கு?
காசுக்கு மட்டுமே மதிப்பு என்றால்
இங்கு பந்தங்கள் எதற்கு?
உறக்கம் மட்டுமே வாழ்க்கை என்றால்
இங்கு லட்சியங்கள் எதற்கு?
மனிதா
பிறப்பை இறப்பாக்கி பார்க்காமல்
ஒவ்வொரு இறப்பையும் பிறப்பாக்கினால்
வாழ்விலும் தாழ்விலும் வீழ்ச்சிகளே இல்லை…
;
No comments:
Post a Comment